Main Menu

கொரோனா வைரஸ் : இங்கிலாந்துப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுகின்றன

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இங்கிலாந்தின் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் வழங்கிய உரையில் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

ஊழியர்களின் அளவு குறைந்து வருவதால், பாடசாலைகள் இயல்பாகவே தொடர்ந்து நடத்தப்படுவது கடினமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளும் மூடப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...