கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை!
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை எதிர்த்துப் போராடும் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வைரஸ் பரவல் அதிகரித்தால் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசாங்கம் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது உலகினை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் அங்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.
அத்தோடு வெளிநாடுகளில் இருக்கும் பிரித்தானியர்களையும் நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.