Day: March 1, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 254 (01/03/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை!
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை எதிர்த்துப் போராடும் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு வைரஸ் பரவல் அதிகரித்தால் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசாங்கம் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் படிக்க...
5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கை நிராகரிப்பு!
5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான் கோரிக்கையை ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிராகரித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கானிய அரசாங்கம் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நிபந்தனையாக 5,000 கைதிகளை விடுவிக்கமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: தாய்லாந்தில் முதலாவது மரணம்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாய்லாந்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜனவரி 30 ஆம் திகதியில் இருந்து தாய்லாந்தில்மேலும் படிக்க...
பிரான்ஸ் அரசாங்கத்தால் 5,000இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் நிகழ்வுகள் இரத்து
நாட்டின் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த பாரிஸ் அரைமேலும் படிக்க...
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்குமாறு வைகோ வேண்டுகோள்
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்டுவர தனி விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் தொள்ளாயிரம் இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளனர் என்றும்மேலும் படிக்க...
கலவரத்தால் வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் – கெஜ்ரிவால்
கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடந்த 23, 24 மற்றும்மேலும் படிக்க...
மூன்று வருடங்களைக் கடந்தது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்: இன்று கவனயீர்ப்பு!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டதைப்போன்று, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக மிகுதிக் காணிகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டுமென கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கேப்பாப்புலவு காணிவிடுவிப்புத் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரிய போராட்டம்மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவிலும் ஒருவர் கொரோனா தாக்கத்தினால் பலி
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3மேலும் படிக்க...
தென் கொரியாவில் இருந்து வருகை தந்த இருவர் வைத்திய சாலையில் அனுமதி
இன்று (01) அதிகாலை 137 இலங்கையர்கள் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு வருகை தந்த இருவரின் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தென் கொரியாவில் இருந்து பலர்மேலும் படிக்க...
சொல்லுவதை செய்து காட்டும் வேலைத் திட்டத்தினை முன்னெடுப்போம்
எதிர்வரும் பொதுதேர்தலில் பாரிய வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பெருபான்மையை நிருபித்து இந்த நாட்டு மக்களுக்கு சொல்லுவதை செய்து காட்டும் வேலைத்திட்டத்தினை எமது பிரதமரோடு ஒன்றினைந்து முன்னெடுத்து காட்டுவோம் என புகையிரத இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (01) பூண்டுலோயா பகுதியில்மேலும் படிக்க...
இன்று முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. ´சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். குறித்த விடயம்மேலும் படிக்க...