Main Menu

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யகாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முன்னணி ஆடைத் தொழிற்சாலையிலேயே குறித்த பெண் பணி புரிந்து வந்துள்ளமையினால், குறித்த ஆடை தொழிற்சாலைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பினை பேணியவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த பெண்ணுடன் பேருந்தில் பயணித்த சுமார் 40பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த பெண்ணின்,  குடும்ப உறுப்பினர்களான கணவர், நான்கு குழந்தைகள் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழந்தைகளில் ஒருவருக்கு, தடிமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடை தொழிற்சாலை கட்டடம், தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...