Main Menu

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்கவரே குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பகிரவும்...