Main Menu

கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப் பட்டதா?- வெளியானது தகவல்!

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை எனவும் பலரும் சொல்வதுபோல் இது மனிதன் உருவாக்கியது அல்ல என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு குழப்பமான கருத்துகள் உலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை எட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேரை இந்நோய் தாக்கியுள்ளது.

இந்த சூழலில் சமீப நாட்களாக இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வு நிறுவனத்திலிருந்து உருவானதாகவும் அது வேண்டுமென்றே பரப்பப்பட்டதாகவும்கூட கருத்துகள் கூறப்பட்டன. ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் இதனை மறுத்துள்ளனர்.

இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி அமைப்பான ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து உறுதியான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஸ்க்ரிப்ஸில் இதற்கான ஆராய்ச்சியில் தொடர்புடைய நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் இது இயற்கையாக உருவானது என்று தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டில் வெளியான சீனாவில் கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) தொற்றுநோயுடன் கொரோனா வைரஸ் அறியப்பட்டது. இதன் இன்னொரு வடிவமாக 2012இல் சவுதி அரேபியாவில் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியுடன் (MERS) இந்நோய் பரவியது.

தற்போது உருவாகியுள்ள கொரோனா வைரஸ் 150இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

தொற்றுநோய் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சீன விஞ்ஞானிகள் SARS – CoV – 2 இன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனா வைரஸ் தரவை உலக அளவில் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கச் செய்தனர்.

பல ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆண்டர்சன் மற்றும் கூட்டுப் பணியாளர்கள் இந்த வரிசைமுறை தரவைப் பயன்படுத்தி SARS – CoV – 2 இன் தோற்றம் மற்றும் பரிணாமத்தை ஆராய்வதன் மூலம் வைரஸ் பற்றிய பல கதைகளை உருவாக்கும் ஆய்வுப் பாதைகளை நோக்கி அவர்கள் கவனத்தை முடுக்கி விட்டனர்.

இதுகுறித்து நேச்சர் மெடிசின் (Nature Medicine) என்ற அமெரிக்க இதழ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கையில்,

“கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவிய பெரிய அளவிலான கோவிட்-19 தொற்றுநோய் மனிதர்களுக்கு எதிரான மாபெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 என்பது மனிதன் உருவாக்கியதல்ல.

கொரோனா வைரஸ் என்பது ஏற்கெனவே பரவிவந்த சார்ஸ் கோவி-2 என்ற நோய்க் கிருமிகளின் அடுத்தகட்ட இயற்கை பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்.

கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சார்ஸ், கோவி-2 மற்றும் தொடர்புடைய வைரஸ்களிலிருந்து பொது மரபணு வரிசைத் தரவுகளின் பகுப்பாய்வின்படி ஆய்வகம் தவிர வேறுவிதமாக செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்ற கூற்றுக்கும் ஆதாரமில்லை.

கிருமியின் உள்ளடக்குகளில் அமைந்துள்ள ஸ்பைக் புரதங்களுக்கான மரபணு வார்ப்புருவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

வைரஸின் வெளிப்புறத்தில் உள்ள ஆயுதம் போன்ற சுருள்கள் மனித மற்றும் விலங்கு உயிரணுக்களின் வெளிப்புறச் சுவர்களை எளிதாகப் பிடிக்கவும் ஊடுருவவும் பயன்படுத்துகின்றன.

யாராவது ஒரு புதிய கொரோனா வைரஸை ஒரு நோய்க்கிருமியாக வடிவமைக்க முயன்றால், அவர்கள் அதை நோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸின் முதுகெலும்பிலிருந்து கட்டியிருப்பார்கள்.

ஆனால், இது இயற்கையாக உருவானது என்பதற்கு சார்ஸ் கோவி-2வின் முதுகெலும்பு – அதன் ஒட்டுமொத்த மூலக்கூறு கட்டமைப்பின் தரவுகளால் உருவாகியுள்ளது. இது கிருமிகளையும் உள்ளடக்கிய இயற்கையின் பரிணாம வளர்ச்சியாகும்.

ஆனால் விஞ்ஞானிகள் ஏற்கெனவே அறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலிருந்து தற்போது காணப்பட்டுள்ள கரோனா வைரஸ்களான SARS – CoV-2வின் முதுகெலும்பு கணிசமாக வேறுபடுவதாகவும், பெரும்பாலும் வெளவால்கள் மற்றும் பாங்கோலின்களில் காணப்படும் தொடர்புடைய வைரஸ்களை ஒத்திருப்பதாகவும் கண்டறிந்தனர்.

வௌவாலிலிருந்து நேரடியாக மனிதனுக்கு மாறியதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், மனிதப் பரிமாற்றம், வெளவால்களுக்கும் மனிதர்களுக்குமிடையேயான ஒரு இடைநிலைப் புரவலன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க வேண்டியள்ளது” என நேச்சர் மெடிசின் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.

பகிரவும்...