Main Menu

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேத்தில் பரவிவருகின்ற நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஹாலந்தில் உள்ள 10 ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக குறித்த தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி ஆய்வு செய்தனர். அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் அது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் வெற்றி கிடைத்தால் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆய்வு குழுவினர் கொரோனா வைரஸின் முதல் 6 பிரிவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள் என்பவர்கள் என்பதால், இந்த மருந்து மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

6ஆவது வகை கொரோனாவுக்கு இவர்கள் முன்பு மருந்து கண்டுபிடித்து இருந்தனர். இதன் அடுத்த கட்ட ஆராய்ச்சியை கடந்த சில மாதங்களாக இவர்கள் செய்து வந்திருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது 7ஆவது வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

பகிரவும்...