Main Menu

கொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை

கொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5ஆம் கட்டமாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே இந்திய- சீனா இடையிலான எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச யோகா தினமான எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

இதன்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எல்லை பிரச்சினை குறித்து பேசுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...