Main Menu

கேரளா மற்றும் கர்நாடகாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – ஐ.நா எச்சரிக்கை!

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த தீவிரவாதிகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

இது குறித்த ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத்  தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்த  திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் இராணுவத்துக்கும்  பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐஎஸ் தீவிராவதிகள்  இந்தியாவில் புதிய நிர்வாகப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...