Main Menu

குறுகிய எண்ணம் படைத்தவராக ஸ்டாலின் காணப்படுகிறார் – பழனிசாமி

தமிழக அரசு முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களை பாராட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குறுகிய எண்ணம் படைத்த தமிழ்நாட்டு எதிர்கட்சி தலைவராகவே அவர் காணப்படுகிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தி.மு.கவின் ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன. எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன? தி.மு.க ஆட்சியில் 26000 கோடி ரூபாய் முதலீடுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. ஸ்டாலின் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுவதற்கு சமம்தான் எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...