Main Menu

குடும்ப வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு எதிராக பரிஸில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரிஸின் place du Trocadéro பகுதியில் #NousToutes என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Céline, Sarah, Maguy, Clothilde, Eliane, Euphémie போன்று கொலை செய்யப்பட்ட நூறு பெண்களின் பெயர்களை கூறி இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான பாதுகாப்புக்கு மில்லியன் யூரோக்கள் ஒதுக்கவேண்டாம், எங்களுக்கு, பில்லியன் யூரோக்கள் ஒதுக்கி பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் அவர்களது கணவராலோ, அல்லது காதலனாலோ பிரான்ஸில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்ப வன்முறைகள் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...