Main Menu

சர்வதேச பெண்கள் தினம்! – பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்து பாரிசில் ஆர்ப்பாட்டம்!

பெண்கள் மீதான வன்முறைக’ளை கண்டித்து பரிசில் நேற்று மார்ச் 7 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

உலகம் மூழுவதும் பெண்கள் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகின்றார்கள். பாலஸ்தீனத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான வன்முறை நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நேற்று இரவு Place de la République பகுதியில் இடம்பெற்றது. 

4,100 வரையான  பெண்கள் மற்றும் ஆண்கள் அங்கு குவிந்து, ‘பெண்கள் மீதான வன்முறைக்கு’ எதிராக குரல் எழுப்பினர். #GrèveFéministe எனும் குறியீட்டு வார்த்தையுடன் சமூகவலைத்தளங்களில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பலர் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பகிரவும்...