Main Menu

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இந்தியா உலக நாடுகளுக்கு விளக்கம்!

குடியுரிமை சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் முஸ்லிம்கள் அல்லாத கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்சிக்கள், புத்த மதத்தவர், இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு உதவவே இந்த குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை உலக நாடுகளிடம் விளக்கமாக தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதைப் போலவே என்ஆர்சி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சிஏஏ, என்ஆர்சி போன்றவற்றால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு மாறாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...