Main Menu

ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்

ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமன பத்திரத்தை கணநாதனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03.01.2020) அலரி மாளிகையில் வைத்து கையளித்தார்.

வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கெளரவ தூதுவராக  கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல தொழிலதிபரான கணநாதன், உகாண்டாவை வதிவிடமாக கொண்டுள்ளார். இவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப்ஸ் கல்லூரியின்  பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...