Main Menu

காசாவில் மேலும் இரண்டு மருத்துவ மனைகளை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைப்பு

இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல்இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது.

கான் யூனிசில் நாசெர் அல்அமால் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் திடீரென டாங்கிகளுடன் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் தங்களின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பல உடல்களை காணமுடிந்துள்ளது என தப்பியோடிய பாலஸ்தீனியர்கள் சர்வதேச ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் அவ்வப்போது எறிகணை வீச்சில் ஈடுபடும் என மருத்துவமனையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள ஐந்துமாடிக்கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் சர்வதேச செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார் எங்களை அச்சுறுத்தவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...