Main Menu

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் – அபிஷேக் சிங்வி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவிகாலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியை காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அபிஷேக் சிங்வி கூறுகையில்,  ”இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று இன்றுடன் ஓராண்டு முடிவுக்கு வருகிறது என்பது உண்மையே. ஆனால் அதன்பின்பு அந்த பதவி காலியாக இருக்காது.

சோனியா காந்தி தலைவராக நீடித்திடுவார். முறையான நடவடிக்கை அமலாகும் வரை அவரே அந்த பதவியை தொடருவார். அந்த நடைமுறை அமலுக்கு வரும் காலம் தொலைவில் இல்லை. இதுபற்றி காங்கிரஸ்  கட்சியின் தேசிய குழு ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நடைமுறையானது காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதனை கட்சி பின்பற்றும். ஆலோசனை இறுதியில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும்பொழுது அதுபற்றிய தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...