Main Menu

காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து  நீக்கப்பட்ட நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா இன்று காலை அறிவித்தார்.

தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகியதாக அறிவித்தார்.

காலையில் காங்கிரசில் இருந்து விலகிய குஷ்பு பிற்பகலில் பா.ஜ.க.வில் இணைந்துகொண்டார்.

பா.ஜ.க தேசியச் செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் குஷ்பு கட்சியில் இணைந்துகொண்டார்.

இந்த நிலையில், நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க மோடி போன்ற தலைவர் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன் என தெரிவித்துள்ள குஷ்பு,  தமிழகத்தில் பாஜகவின் அடிமட்ட தொண்டராக செயற்படவுள்ளேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...