Main Menu

கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய 7 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட முயற்சி

நியூசிலாந்து நாட்டில் கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய 7 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விடும் பணி நடைபெற்றது.

மதரங்கி (Matarangi) அருகே உள்ள கடற்கரையோரம்  7 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியபடி கிடந்தன. மேலும் 4 திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்கியிருந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் சுமார் ஆயிரம் பேர், அதிகாரிகளுடன் இணைந்து உயிருக்கு போராடும் திமிங்கலங்களை கடலுக்குள் விடும் பணியில் ஈடுபட்டனர். 

பகிரவும்...