Main Menu

கமிலாவிற்கு ராணி அந்தஸ்த்து வழங்க எலிசபெத் மகாராணியார் விருப்பம்

இளவரசர் சாள்ஸ் பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் பொழுது, அவரது மனைவி கமிலாவுக்கு இராணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனத் தாம் விரும்புவதாக எலிசபெத் மகாராணியார் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைய எதிர்காலத்தில் அவர் ‘கமிலா மகாராணி’ என அழைக்கப்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியாரின் விருப்பம் குறித்து வெளியான தகவல் அரச குடும்பத்தை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எலிசபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு முடி சூடியமை குறிப்பிடத்தக்கது.


பகிரவும்...