கனவில் கூட நினைக்கவில்லை… எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பி குறித்து உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
எஸ்.பி.பி. – ரஜினிரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் அண்ணாத்த. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார்.
இதற்குமுன் ரஜினி நடித்த பல படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ஆனால், இந்த பாடல் ரஜினிக்காக, எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலாகும். இதுகுறித்து ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
ரஜினியின் பதிவு
‘45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்த படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.