Main Menu

ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமை…

இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் காவற்துறையினர்  இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டதாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர், வைத்திய கலாநிதி சமந்த கிதலவாரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், சுமார் 3 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் 24,211 பேர் பல்வேறு வகையான போதை வில்லைகளைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையானோர் அதிகமாக உள்ளதாகவும், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். 

பகிரவும்...