Main Menu

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சட்ட செயலாளர் நிஷங்க நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு கட்சியின் யாப்பில் அனுமதியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் தெரிவிற்காக கட்சியின் மத்திய செயற்குழுவினால் வேட்பாளர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, ஜே.வி.பி. சார்பாக அநுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை அறிவிப்பதில் கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவுகின்ற நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...