Main Menu

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது

ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 666 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மூவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் மூன்று இலட்சத்து மூவாயிரத்து 699 கொரோனா தொற்றாளர்கள் பாதிவாகியுள்ளதுடன், 28 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று இத்தாலியிலும் நேற்றைய தினம் 114 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 17 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 344 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 34 ஆயிரத்து 984 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியினை பொறுத்தவரையில் நேற்று மாத்திரம் 330 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஐவர் மாத்திரமே உயிரிந்துள்ளனர்.

அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 766 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 9 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...