ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா தொற்று – இலங்கையர்கள் இருவருக்கும் பாதிப்பு!
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக பாதிக்கப்பட்ட 15 பேரில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அங்கு தற்போது 74 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு இத்தாலியர்கள், இரு இலங்கையர்கள், இரு பிரித்தானியர்கள், இரு இந்தியர்கள் மற்றும் ஜேர்மனி தென் ஆபிரிக்கா, தன்சானியா, ஈரானைச் சேர்ந்த தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.