Main Menu

எல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்திலேயே, அனைத்து அதிபர் வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பகிரவும்...