Main Menu

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலைசெய்தாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விவாதத்தின் போது குற்றவாளிக்கூண்டிலிருந்த அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார். 

இதனை அடுத்து அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரின் ஆட்சி இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து அவரது கட்சியான ´முஸ்லிம் பிரதர்வுட்´ தடைசெய்யப்பட்டதுடன் , அதன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

பகிரவும்...