Main Menu

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தற்போதுவரை வைரஸ் தொற்றினால் ஏழு கோடியே ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 88ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர நான்கு கோடியே 91இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

பகிரவும்...