Main Menu

டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒரு இலட்சத்து 489பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 70ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 918பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 132பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;. 14பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆயிரத்து 907பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 40பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 75ஆயிரத்து 664பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...