Day: December 11, 2020
மட்டக்களப்பில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப் பட்டது
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பாடுமீன் அரிமா லயன்ஸ் கழகத்தினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை மட்டக்களப்பு– ஊறணியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பாடுமீன் அரிமாமேலும் படிக்க...
கமல் பிரசாரம்- முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நாளை மறுநாள் தொடங்குகிறார்
சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க.மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தற்போதுவரை வைரஸ் தொற்றினால் ஏழு கோடியே ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...
டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒரு இலட்சத்து 489பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 70ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில், இதுவரைமேலும் படிக்க...
சீனாவுக்கு எதிராக இந்தியாவைத் தூண்டிவிடும் அமெரிக்கா- ரஷ்யா குற்றச்சாட்டு
சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தேய நாடுகளும் இந்தியாவைத் தூண்டிவிடுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய சர்வதேச விவகார சபைக் கூட்டத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் பேசிய அந்நாட்டு வெளியுவுத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தோ-பசிபிக் நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பைமேலும் படிக்க...
தீவிர இஸ்லாமிய வாத குழுக்களை கட்டுப்படுத்தும் சட்ட மூலத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல்!
தொடர் தீவிரவாத தாக்குதல்களையடுத்து தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் சட்டமூலத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தினை ‘பாதுகாக்கும் சட்டம்’ என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களின் பிடியில் இருந்து முஸ்லிம்களைமேலும் படிக்க...
ரஜினி காந்தின் கட்சி பெயர் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்!
நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், கடந்த சிலமேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு எதிரான கூட்டணியை ஐ.தே.க.வழி நடத்துவதே சிறந்தது- ருவான்
அரசாங்கத்தை கைப்பற்ற வலிமையான அரசியல் சக்தியை நிறுவ வேண்டுமானால், எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்த வேண்டியது ஐ.தே.க.தான் என அக்கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) புத்தளத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ருவான்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் : டக்ளஸ் தேவானந்தா அழைப்பு
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம்மேலும் படிக்க...
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினம் யாழில் அனுஷ்டிப்பு
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது பாரதியார்மேலும் படிக்க...