Main Menu

உணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு!

தஜிகிஸ்தானில் கெட்டுப்போன ரொட்டிகளை உட்கொண்ட 14 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றும் பணி இடம்பெற்றது.

அதற்காக சிறையை விட்டு வெளியேறிய கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் உணவாக வழங்கப்பட்டன.

அவற்றை உட்கொண்ட அரை மணி நேரத்துக்குள் 16 பேருக்கும் மயக்கம், குமட்டல், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன.

வேறு சிறைக்குள் வாகனம் நுழைந்தவுடன், 16 கைதிகளுக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இருந்த போதும் 14 கைதிகள் வழியிலேயே உயிரிழந்ததாகவும் 2 பேர் மாத்திரம் உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கைதிகள் உட்கொண்ட ரொட்டிகள் நாட்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...