Main Menu

இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவு

இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த விபத்துக்களில் 651 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் 1,355 பேர் சிறு காயமடைந்துள்ளதுடன் 341 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளை கடைப்பிடிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

பாதசாரி கடவையில் எவரேனும் பயணித்தால் அந்த பாதசாரிகள் வீதியை கடக்கும் வரை வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் அவர்களுக்கு ஒத்தழைப்பு வழங்கி இடமளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...