Main Menu

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில்  20 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயணித்த மூன்று மீன்பிடி படகுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள குறித்த மீனவர்களை  மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள உதவி மீன்வளத்துறை இயக்குனரிடம் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...