இறையடி எய்தினார் தி.மு.க முன்னாள் உறுப்பினர் உசேன்!
தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காலமானார்.
அவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க கட்சியில் சென்னையில் மிக முக்கியமான உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் ஆயிரம் விளக்கு உசேன்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை தேர்தலில் நின்று தோல்வி அடைந்த இவர், பின் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அதிலிருந்து இவர் ஆயிரம் விளக்கு உசேன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்பட்டார்.
சென்னையில் தி.மு.கவிற்கு இஸ்லாமிய வாக்குகள் கிடைக்க இவரின் பிரச்சாரம் முக்கிய காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.