Main Menu

கலந்துரையாடலின் பின் முடிவை வெளியிட்டது ரெலோ

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். 

வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின்  உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். 

இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

பகிரவும்...