Main Menu

இயக்குனர் ராஜசேகர் காலமானார்!

இரட்டை இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ராஜசேகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ராஜசேகர். ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து படங்களை இயக்கினார். ’பாலைவனச் சோலை’, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உட்பட சில படங்களை இவர்கள் இயக்கினார்கள். பிறகு நடிப்பிl கவனம் செலுத்திய ராஜசேகர், தொடர்ந்து படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.

கடந்த சில நாட்களாக, உடல் நலமில்லாமல் இருந்த அவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனிறி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் இவர்கள் ‘ஒருதலைராகம்’ உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...