Main Menu

இந்தோ னேஷியாவில் படகு கவிழ்ந்ததால் இருவர் பலி 22 பேர் மாயம்

இந்தோனேஷியாவில் படகு ஒன்று கவிழ்ந்ததால் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 22 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

தென் சுலாவெசி மாகாணததின் சேலாயார் தீவுப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இப்படகு கவிழ்ந்தது. 

இப்படகில் 35 மீனவர்கள் இருந்தனர் எனவும் அவர்களில் 11 பேர் 3 நாட்களாக நிர்க்கதியாக மிதந்துகொண்டிருந்த பின்னர்  இரு சிறிய தீவுகளில் வைத்து  மீட்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மோசமான காலநிலைக்கு மத்தியில் இப்படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷிய கடற்படையினரும் தொண்டர்களும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும்...