Main Menu

இந்து சமுத்­திர மாநாட்டில் பிர­தமர் ரணில் சிறப்­புரை

மாலைதீவில், இன்று ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையொன்றை ஆற்றிவுள்ளார்.

இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு நேற்று திங்­கட்­கி­ழமை மாலை­தீவு சென்­ற­டைந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவுக்கு அந்­நாட்டில் அமோக வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது. 

இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ரது பாரியார் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அமைச்­சர்கள்  அரச அதி­கா­ரிகள் உள்­ளிட்ட குழு­வி­ன­ருடன் மாலை­தீவு சென்­ற­டைந்தார். 

 நேற்று திங்­கட்­கி­ழமை காலை 8.30 மணிக்கு மாலை­தீவு சர்­வ­தேச விமான நிலை­யத்தை சென்­ற­டைந்த பிர­த­மரை அந்­நாட்டு வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் அப்­துல்லா ஷகீட் வர­வேற்றார். 

மாலை­தீவு – சுதந்­திர சதுக்­கத்தில் பிர­த­ம­ருக்­கான வர­வேற்பு நிகழ்வு இடம்­பெற்­ற­தோடு  அந்­நாட்டு தேசிய பாது­காப்பு படை­ய­ணியின் மரி­யாதை அணி­வ­குப்பும் நடை­பெற்­றது.

 அத்­தோடு இரு நாட்டு தேசிய கீதங்­களும் இசைக்­கப்­பட்­டன. பின்னர் அந்­நாட்டு ஜனா­தி­பதி மாளி­கைக்கு சென்ற பிர­தமர் நினைவு குறிப்பு புத்­த­கத்­திலும் கையெ­ழுத்­திட்டார். 

மாநாட்டின் பின்னர் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உத்­தி­யோ­க­பூர்வ கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றது.   

அமைச்­சர்­க­ளான ரவுப் ஹக்கீம்,  வஜிர அபே­வர்­தன,  தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகி­யோரும் இந்த கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­றனர்.  

அத்­தோடு பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்­க, ஊடகச் செய­லாளர் பிய­சேன திசா­நா­யக்க  இணைப்பு செய­லாளர் மது­ஷங்க திஸா­நா­யக்க மற்றும் மாலை தீவிற்­கான இலங்கைத் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.பீ.தொர­தெ­னிய உள்­ளிட்ட பலரும் இரு உத்­தி­யோ­க­பூர்வ கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கு­பற்­றினர். 

இநத கலந்­து­ரை­யா­டலின் போது   இலங்­கையில் கல்வி மற்றும் சுகா­தாரம் என்­பன சிறந்த மட்­டத்தில் காணப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய மாலை­தீவு ஜனா­த­பதி இப்­ர­பஹிம் மொஹமட் சாலி இவற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு இரு நாட்டு உற­வு­களை வலுப்­ப­டுத்த வேண்டும் என்றும் குறிப்­பிட்டார்.

 அத்­தோடு இலங்­கையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அரச பல்­க­லைக்­க­ழகம் ஒன்றின் கிளையை மாலை­தீவில் ஸ்தாபிப்­பது தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­பட்­டது. 

மேலும் இரு நாடு­க­ளுக்கும் இடையில் வீசா சலு­கை­களை வழங்­கு­தல், உயர் கல்­வி, வைத்­திய பயிற்சி மற்றும் இளைஞர் வளர்ச்சி மற்றும் தொழி­நுட்பம் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் 3 புரிந்­து­ணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றும் கைசாத்திடப்பட்டது. 

இந்த விடயதானங்களுடன் தொடர்புடைய அமைச்சர்களான வஜிர அபேவர்தன, தயா கமகே, ரவுப் ஹக்கீம் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் இலங்கை சார்பில் கைசாத்திட்டனர்.

பகிரவும்...