Main Menu

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும்: மஹிந்த அமரவீர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை கைகூடாதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றாக இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்.

ஆனால் குறித்த பேச்சுவார்த்தை கைகூடாதென்றால், தனித்துப் போட்டியிட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அதனை கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...