Main Menu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்!

தமிழகம், சென்னை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமானதுடன், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சிறுநீரக பாதிப்பு, குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்நிலையில், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பகிரவும்...