Main Menu

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை!

தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து பண்டிகைகாலங்கள் வரவுள்ளதால் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரம் தாக்குல் நடத்தும் திட்டத்துடன் எல்லைப் பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகளை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...