Main Menu

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91.54 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81.84 இலட்சமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 470 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74 இலட்சத்து 32 ஆயிரத்து 829-ல் இருந்து 74 இலட்சத்து 91 ஆயிரத்து 513 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 58 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோரின் எண்ணிக்கை 91.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு  வைத்தியசாலைகளில் 5 இலட்சத்து 70ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...