Main Menu

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் முதலாவது உயிரிழப்பு பதிவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளை ஆராயும் குழு இது குறித்து அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி 68 வயதுடைய நபர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அலெர்ஜி, ஒவ்வாமைக்கு ஆளானதாகவும், அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

இது குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...