Main Menu

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4,000 ஐ நெருங்குகின்றது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,423 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 131,423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 6629 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 142 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 54,385 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

பகிரவும்...