Main Menu

இத்தாலிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பிரதமர் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அறிவித்துள்ளார்.

2023ல், சட்டமன்றம் முடியும் வரை, முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் அரசாங்கத்தின் தலைமையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.

சனிக்கிழமையன்று சக வலதுசாரித் தலைவர்களுடனான இணையவழி சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா தொற்று நிலைமையில் இன்று, இத்தாலிக்கு ஒற்றுமை தேவை என சில்வியோ பெர்லுஸ்கோனி கூறியுள்ளார்.

பகிரவும்...