Main Menu

இத­ய­ சுத்­தி­யுடன் அழைத்தால் ஜனா­தி­ப­தி­யுடன் பேசத் தயார்: மாவை சேனா­தி­ராஜா

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி இத­ய­சுத்­தி­யுடன் சிந்­தித்து தமிழர் தரப்­புடன் பேச விரும்­பினால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷவுடன் பேசத் தயா­ராக  இருப்­ப­தாக இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு  குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறு­கையில், 

ஜனா­தி­பதி தேர்தல் முடிவின் பின்னர் அர­சியல் நிலை­மைகள் எவ்­வாறு உள்­ளன என்­பது அனை­வ­ருக்கும் தெரி­கின்­றது. ஜனா­தி­பதி கோத்­த­பய ராஜபக் ஷ தென்­னி­லங்கை சிங்­கள மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் ஜனா­தி­ப­தி­யா­கி­விட்டார். தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு இல்­லாது தான் வெற்றி பெற்­ற­தா­கவும் அவரே கூறி­யுள்ளார். அவ்­வாறு இருக்­கையில் இந்த நிலை­மைகள் இன­வாத அர­சியல் செயற்­பா­டுகள் ரீதியில் இடம்­பெ­றக்­கூ­டாது என்­பதே தொடர்ச்­சி­யாக எமது கோரிக்­கை­யாக உள்­ளது. அதேபோல் தான் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுடன் இணைந்து பய­ணிக்க விரும்­பு­கின்றேன் என ஜனா­தி­பதி கூறி­யுள்ள கார­ணியை நாம் வர­வேற்­கிறோம். அவர் கூறி­யது உண்­மை­யென்றால் தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்ற உண்­மை­யான நோக்கம் ஜனா­தி­ப­திக்கு இருப்பின் நாம் அவ­ருடன் பேச தய­ரா­கவே உள்ளோம். 

தமிழ் மக்­க­ளுக்கு நிரந்­தர தீர்வு ஒன்று வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் நாம் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்தோம். சஜித் பிரே­ம­தா­சவும் சிங்­கள பௌத்தர் தான். அவர் இன­வா­தி­யா­கவோ  பிரி­வி­னை­வா­தி­யா­கவோ செயற்­ப­ட­வில்லை. எனினும் அவர் தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு ஒன்­றினை வழங்­குவார் என்ற நம்­பிக்­கையும் வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­யவும் தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்­தனர். அவ்­வாறு இருக்­கையில் தமிழ் மக்கள் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்­ததை சாட்­டாக வைத்து பிரி­வி­னை­வாத அல்­லது இன­வாத சாயம் எம்­மீதோ அல்­லது எமது மக்கள் மீதோ பூச வேண்டாம் என்ற கார­ணியை நாம் கூறு­கின்றோம். தமிழ் மக்­களும் தென்­னி­லங்கை சிங்­கள பௌத்தர் ஒரு­வரை தான் ஆத­ரித்­தனர் என்­பதை மறந்­து­வி­டவும் வேண்டாம். 

ஆகவே இப்­போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்ன செய்ய வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து ஆராய்­கின்­றது. இந்த வார இறு­திக்குள் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் அர­சியல் குழு கூடும். அதேபோல் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களும் சில தினங்­க­ளுக்குள் பேச்­சு­வார்த்தை நடத்தி அடுத்த கட்­ட­மாக என்ன செய்ய வேண்டும் என்­பது குறித்து ஆராய்வோம். அதேபோல் உண்­மை­யான நோக்­கங்­க­ளுடன் இத­ய­சுத்­தி­யுடன் ஜனா­தி­பதி அவர்கள் எம்மை பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்தால் நாமும் அவ­ருடன் பேசி தீர்­வு­களை நோக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுக்க தய­ராக உள்ளோம். 

மேலும் இந்­திய வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சர் ஜெய­சங்கர் இலங்கை விஜ­யத்தை மேற்­கொண்ட பின்னர் ஜன­தி­ப­தியும் இந்­திய விஜயம் ஒன்­றினை முன்­னெ­டுக்­க­வுள்ளார். இந்­நி­லையில் தமிழ் மக்­களின் விட­யங்­களில் சில அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எவ்வாறு இருப்பினும் இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் பதிவிட விடும்பவில்லை. எமது உறுதியான நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் இராஜதந்திர நகர்வுகளை குழப்பிக்கொள்ள நாம் தாயரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...