Main Menu

ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது – சீமான்

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு திட்டமாக மாற்றும் அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் அருகில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் விடயத்தில் நாம் தோற்றுவிட்டோம்.

இதுவரை சுமார் 350 குழந்தைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த விடயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நாம்  நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை கடைப்பிடிக்காததன் பிரதிபலிப்புதான் சுர்ஜித்தின் உயிரிழப்பு எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...