Main Menu

ஆப்கானிஸ்தானில் 20 சதவீத சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்

ஆப்கானிஸ்தானில் நிலவும் வறுமை காரணமாக 20 சதவீத சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரால் ஏராளமான குடும்பங்கள் உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளன.

பெற்றோர் பலர் வேலை இழந்ததால், குடும்பத்தின் வறுமையை போக்க சிறுவர்கள் திண்பண்டங்கள் விற்றும், கார்களைத் துடைத்தும், ஷூ பாலிஷ் செய்தும், குப்பை கூளங்களில் இருந்து மறுசுழற்சிக்குத் தேவைப்படும் பொருட்களை சேகரித்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு 5 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...