Main Menu

எதிர்க்கட்சி தலைவராக சஜித் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெறும் அமர்வில் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின்  வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே சபாநாயகர் முன்னிலையில்  பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...