Main Menu

ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக 18 தமிழர்கள் கைது!

ஆந்திர பிரதேசம் மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இன்று 18 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரம் வெட்ட அவர்கள் சென்றதாக சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட தமிழர்கள் காவல் நிலையம் அழைத்து சென்ற ஆந்திர போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து 2 வாகனங்கள் மற்றும் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பகிரவும்...