Main Menu

குழந்தை உட்பட 20 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா!

அவுஸ்ரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட  20 இலங்கையர்களை அவுஸ்ரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் இதனை உறுதி செய்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்குள் நுழையும் நோக்குடன் இலங்கையர்கள் 20பேர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கடந்தவாரம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தை உட்பட 20 பேர் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட படகுடன் அதிலிருந்தவர்களை கிறிஸ்மஸ்தீவுகளில் தடுத்துவைத்திருந்த அவுஸ்ரேலிய அதிகாரிகள், அவர்களின் புகலிடக்கோரிக்கையை நிராகரித்த பின்னர் அவர்களை வாடகை விமானமொன்றின் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இலங்கையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற பின்னரே இந்த படகு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளது என்றும்  கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களிற்காக படகு தொடர்பான மேலதிக தகவல்களை பிரதி பிரதமர் வெளியிட மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமை ஐந்து வருடங்களில் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...